Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் சுவாமிமலையில் பாபநாசம் பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி 3000 மேற்பட்ட பொருட்கள் பழுதடைந்தது. அதை சீரமைத்து கொடுக்கக் கோரி அப்பகுதியில், அரசால் நியமிக்கப்பட்ட பழுது நீக்க நியமிக்கப்பட்ட கடைகளில் அப்பகுதி மக்கள் பழுது நீக்க கோரி கொடுத்திருந்தனர்.
அவைகளைப் பாதுகாக்க சுவாமிமலை பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தில் அறைகளில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பல் ஆயின. மேலும் சமுதாய கூடத்தில் பல பகுதிகள் இடிந்து விழுந்தன.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 4 வண்டிகளில் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக பழுதடைந்த இந்த சமுதாய கூடத்தை முற்றிலும் இடிப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.